×

இமாச்சலப்பிரதேச தலைநகர் சிம்லாவில் இந்த ஆண்டின் முதல் பனிப்பொழிவு பதிவு

இமாச்சலப்பிரதேசம்: இமாச்சலப்பிரதேச தலைநகர் சிம்லாவில் இந்த ஆண்டின் முதல் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சிம்லா நகரின் சுற்றுலா தலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவியது. மாநிலத்தின் மிக குறைந்த வெப்பநிலையாக நேற்று கீலாங்கில் -5.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.பழங்குடியின மக்கள் வசிக்கும் மாவட்டங்களான கின்னார் போன்ற பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே காஷ்மீர் மாநிலத்தில் கருவுற்ற பெண் ஒருவர் வலியால் துடித்த நிலையில் கொட்டும் பனிமலைக்கிடையில் அவரை இராணுவ வீரர்கள் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்….

The post இமாச்சலப்பிரதேச தலைநகர் சிம்லாவில் இந்த ஆண்டின் முதல் பனிப்பொழிவு பதிவு appeared first on Dinakaran.

Tags : Himachal Pradesh ,Shimla ,Dinakaran ,
× RELATED நடிகை கங்கனாவுக்கு எதிராக முன்னாள்...