×

ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம் பூட்டிய வீட்டில் தாய், மகன் தற்கொலை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே பூட்டிய வீட்டில் தாய், மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஸ்ரீபெரும்புதூர் அருகே, மணிமங்கலம் அடுத்த வரதராஜபுரம், கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (45). தனியார் ஐடி நிறுவன சீனியர் மேலாளர். இவரது மனைவி சுகாசினி (38). இவர்களது மகன் பிரனித் (11). சுகாசினிக்கு சிறிது மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. சிறுவன் பிரனித், அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தான். இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல் பிரேம்குமார் வேலைக்கு சென்றார். இரவு 10.30 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கவில்ைல. இதனால் சந்தேகமடைந்த பிரேம்குமார், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு படுக்கையறையில் சுகாசினி, பிரனித் ஆகியோர் தூக்கில் சடலமாக தொடங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலங்களை கைப்பற்றி, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர். தாய், மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது….

The post ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம் பூட்டிய வீட்டில் தாய், மகன் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Sriepruthur ,Sripurudur ,Sriperudur ,
× RELATED ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு தனியார்...