×

20அடி மேம்பாலத்திலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை முயற்சி: கை, கால் முறிவு

ஆவடி: ஆவடி அடுத்த பட்டாபிராம், மேற்கு கோபாலபுரத்தை சார்ந்தவர் பத்மநாபன். இவரது மகள் நர்மதா(18). இவர், பிளஸ் 2 வரை படித்துள்ளார். கடந்த மே மாதம் நர்மதாவின் அத்தை காஞ்சனா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது மறைவையடுத்து, நர்மதா கடும் மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் நர்மதா வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார். பின்னர், அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடினர். இதன் பிறகு, நர்மதா, வண்டலூர்-மீஞ்சூர் 400அடி வெளிவட்ட சாலை, ஆவடி அடுத்த மோரை பகுதியில் 20அடி உயர மேம்பாலத்தின் இருந்து கீழே குதித்துள்ளார். இதில், அவரது வலது கை, கால் முறிவு ஏற்பட்டு உயிருக்கு போராடினார். இதனையடுத்து, படுகாயமடைந்த அவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சேர்த்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்….

The post 20அடி மேம்பாலத்திலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை முயற்சி: கை, கால் முறிவு appeared first on Dinakaran.

Tags : Awadi ,Padmanaban ,Battapram, West Gobalapuram ,narmada ,
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!