×

வங்கி வாடிக்கையாளர் பணம் ரூ.7.5 கோடியை கையாடல் செய்த முன்னாள் Yes Bank ஊழியர்கள் கைது!

வங்கி வாடிக்கையாளர் பணம் ரூ.7.5 கோடியை கையாடல் செய்த முன்னாள் Yes Bank ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புகார்தாரர் திரு.ராஜேந்திரன் மெய்யப்பன், த/பெ. மெய்யப்பன் Flat No: 101. Radiance Elite, ரத்னா நகர், தேனாம்பேட்டை, சென்னை என்பவர் கொடுத்த புகாரில், அவர் கடந்த 2018ம் ஆண்டு முதல் Yes bank, Adyar branch-ல் வங்கி கணக்கு பராமரித்து வந்ததாகவும், அக்கிளையின் மேலாளராக பணிபுரிந்த Patrick Hopman என்பவர் கடந்த 2021 ம் ஆண்டு நவம்பர் மாதம் தங்களுக்கு அறிமுகம் ஆனதாகவும் புகார்தாரர் மற்றும் அவரது மனைவி Senior Citizen என்பதால், பணத்தை Deposit செய்தால் அதிகபடியான வட்டி கிடைக்கும் என்று Patrick Hopman, Manager என்பவர் கூறியதன் பேரில் ஆசை வார்த்தைகளை நம்பி புகார்தாரர் அவரது பெயரிலும் அவரது மனைவி திருமதி பானுமதி ராஜேந்திரன் என்பவரின் பெயரிலும் இரண்டு சேமிப்பு கணக்குகள் துவங்கி Rs.7.5 கோடி (தோராயமாக) Deposit செய்ததாகவும், பின்பு புகார்தாரர் வெளிநாட்டில் இருந்த சமயத்தில் Patrick Hopman என்பவர் தங்களுக்கு தெரியாமல் தங்களது பெயரில் வங்கியிலிருந்து Cheque Book பெற்று தாங்கள் Deposit செய்த அனைத்து தொகையையும் Patrick என்பவர் காசோலைகளில் எங்களது கையொப்பத்தை போலியாக கையொப்பமிட்டு அதை தங்களுக்கு அறிமுகம் இல்லாத பல்வேறு நபர்களின் வங்கி கணக்குகளுக்கு பணப்பரிமாற்றம் செய்து தங்களுடைய பணத்தை கையாடல் செய்து ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி புலனாய்வுப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்பேரில் வங்கி மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் அவர்களின் தலைமையிலான காவல் குழுவினர் மேற்கொண்ட விசாரணையில், எதிரி Patrick Hopman என்பவரின் Travel History-ன் படி அவர் லண்டன் தப்பி சென்றுள்ளார் என்பது தெரியவந்தால் எதிரிக்கு Look Out Circular மற்றும் Red Corner Notice வழங்கப்பட்டுள்ளது. மேலும் எதிரி Robert என்பவர், புகார்தாரர் மற்றும் அவரது மனைவி ஆகியோர்களை ஏமாற்றும் நோக்கில் மேலாளார் Patrick Hopman என்பவருக்கு உடந்தையாக இருந்து எதிரி பெயரில் வங்கி கணக்குளை துவங்கி அதன் மூலம் Rs.3,70,33,000/- பணப்பரிமாற்றம் செய்து புகார்தரருக்கு இழப்பீடு ஏற்படுத்தியது தெரியவருகிறது. அதன்பேரில், மேற்படி மோசடிக்கு உடந்தையாக இருந்த சென்னையை சேர்ந்த எதிரி Robert என்பவர் 17.05.2024 ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து திரு.பாட்ரிக் ஹாப்மேன் என்பவருடன் பணியாற்றிய கார்த்திக் என்பவரிடம் வங்கி இன்னும் பணபரிவர்த்தனை இலக்கை அடையவில்லை, எனவே வங்கி கணக்கு துவங்க ஆட்கள் யாராவது ஏற்பாடு செய்யுங்கள் தனது பணத்தை Deposit செய்து கணக்கு காட்டலாம் என்று கூறியுள்ளார்.

எதிரி -1 Mr. Patrick Hopman கீழ் அதே வங்கியில் வேலை செய்யும் 1.கார்த்திக் 2.செந்தில் என்பவரின் உதவியுடன் ஐந்து நபர்களுக்கு வங்கி கணக்கு துவங்கியுள்ளார். எதிரி மோசடி செய்ய வேண்டுமென்ற எண்ணத்தோடு மேற்படி ஐந்து வங்கி கணக்குகள் தொடங்கி வாதியிடம் மோசடி செய்த தொகையிலிருந்து ரூ.36,00,000/- லட்சத்தை Deposit செய்து கணக்காளர்களிடமிருந்து சுய கையொப்பமிட்ட காசோலைகளை (Self Cheque) பெற்று ரூ.36.00,000/ லட்சத்தை கையாடல் செய்து Commission பெற்றுள்ளனர். இதனை அடுத்து எதிரிகளான முன்னாள் Yes Bank ஊழியர்கள் 1.கார்த்திக், வ/32, த/பெ.சௌந்தராஜன், திருப்பத்தூர் மாவட்டம் 2.செந்தில்குமார் வ/41, த/பெ.சங்கர நாராயணன், முகப்பேர், சென்னை ஆகியோர்களை 08.12.2024 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேற்படி மோசடி கும்பலை கைது செய்த வங்கி மோசடி புலனாய்வுப் பிரிவு, காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

 

The post வங்கி வாடிக்கையாளர் பணம் ரூ.7.5 கோடியை கையாடல் செய்த முன்னாள் Yes Bank ஊழியர்கள் கைது! appeared first on Dinakaran.

Tags : Yes Bank ,Rajendran Mayyappan ,Maiyapan ,Radiance Elite ,Ratna Nagar ,Tenampetta, Chennai ,Dinakaran ,
× RELATED ஜீ குழுமத்தின் ரூ.5,000 கோடி கடனை தள்ளுபடி செய்தது யெஸ் வங்கி