×

மேலூர் அருகே இடிந்து விழுந்த நிழற்குடை: 5 பேர் காயம்

மேலூர்: மேலூர் அருகே மேலவளவு காந்திநகர் பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. சாலையின் உயரம் அதிகரித்த நிலையில் பஸ் ஸ்டாப் தரைக்குள் செல்ல ஆரம்பித்தது. இதை அகற்றி விட்டு புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என அப்போதே ‘தினகரன்’ நாளிதழ் சுட்டி காட்டியது. ஆனால் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக அது கண்டு கொள்ளப்படவில்லை.இந்நிலையில் நேற்று மாலை அந்த பஸ் ஸ்டாப்பில் பஸ்சிற்காக சிலர் காத்திருந்த போது, எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் சித்திரைசெல்வன்(30), புளியம்மாள்(50), பழனிக்குமார்(40), மாற்றுத்திறனாளி கண்ணன்(45), சிறுவன் அஜய்(8) ஆகியோர் காயமடைந்தனர். அருகில் உள்ளவர்கள் இவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இனியாவது அதிகாரிகள் இது போன்ற ஆபத்தான கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்வார்களா ? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்….

The post மேலூர் அருகே இடிந்து விழுந்த நிழற்குடை: 5 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Nilukuda ,Melur ,Nizhalkudai ,Melavalu Gandhinagar ,Nijlakudai ,Dinakaran ,
× RELATED அரசினர் பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை துவக்கம்