×

கோயில் சொத்துக்களின் குத்தகை, வாடகை நிலுவைத் தொகையை உடனடியாக வசூலிக்க திருக்கோயில் அலுவலர்களுக்கு அறிவுரை

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் பல்வேறு திருக்கோயில்களில் ஆய்வு மேற்கொண்டு திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.     தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான திருக்கோயில்களில் அன்றாட பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் நடத்திடவும், அவற்றை பராமரிக்கவும், பண்டையகால மன்னர்கள் முதற்கொண்டு அனைத்து தரப்பினரும் இன்றைய தேதி வரை, அசையும் மற்றும் அசையா சொத்துக்களை தானமாக வழங்கி வருகிறார்கள். இத்தகைய சொத்துக்களை முறையாக பாதுகாப்பதும், பராமரிப்பதும் அவற்றின் மூலம் வருவாயினை பெருக்கி, திருக்கோயில்களை பராமரிப்பதும், புனரமைப்பதும் இத்துறையின் முக்கிய பணியாகும்.     திருக்கோயில்களுக்குச் சொந்தமான அசையாச் சொத்துக்கள் குத்தகை/ வாடகைக்கு விடப்பட்ட இனங்களில் இருந்து வரப்பெற வேண்டிய குத்தகை / வாடகைத் தொகையானது பல வருடங்களாக வசூலிக்கப்படாமல் அதிக அளவில் நிலுவையில் உள்ளது. குத்தகை / வாடகை நிலுவைத் தொகையினை 30 தினங்களுக்குள் செலுத்தப்பட வேண்டுமெனவும், அவ்வாறு செலுத்தப்படவில்லையெனில் வெளியேற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட திருக்கோயில் செயல் அலுவலர், நிர்வாகி, பரம்பரை அறங்காவலர் ஆகியோர் பதிவு தபால் ஒப்புதல் அட்டையுடன் அனுப்பப்பட வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.  திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களில் சட்டபூர்வமான வாடகை ஒப்பந்தம் ஏதுமில்லாமலும், உரிய வாடகையினை செலுத்தாமலும், நிலுவைத் தொகையினை செலுத்த முன்வராத நபர்கள் மற்றும் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.  இதுவரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதை அறிந்து ஆக்கிரமிப்பு செய்திருந்த தனிநபர்கள் தானாக முன்வந்து திருக்கோயில் இடங்களை ஒப்படைத்து வருகிறார்கள்.  அதற்கான வாடகை நிலுவை தொகையினையும் செலுத்தி வருகிறார்கள். இதேபோல் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ள திருக்கோயில் இடங்களை தாமாக முன்வந்து திருக்கோயிலில் ஒப்படைக்குமாறும், நிலுவை தொகையினை முறையாக செலுத்தி திருக்கோயில் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.   …

The post கோயில் சொத்துக்களின் குத்தகை, வாடகை நிலுவைத் தொகையை உடனடியாக வசூலிக்க திருக்கோயில் அலுவலர்களுக்கு அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Hon'ble Tamil ,Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Hon'ble Hindu ,Charities ,Minister ,PK Shekharbabu ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...