×

திருமுல்லைவாயலில் வேலை கிடைக்காத விரக்தி இன்ஜினியர் தற்கொலை

திருமுல்லைவாயல்: வேலை கிடைக்காத விரக்தியில் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை செய்தார். ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சோழம்பேடு, பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (31). இவர், பி.இ படித்து விட்டு மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். கடந்த 3 மாதத்துக்கு முன்பு ஆட்கள் குறைப்பு காரணமாக இவரை வேலையில் இருந்து நிறுத்திவிட்டனர். இதன்பிறகு கார்த்திகேயன் பல கம்பெனிகளுக்கு வேலை தேடி அலைந்தபோதும் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் பெற்றோரிடம் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.இந்தநிலையில், நேற்று மதியம் கார்த்திகேயன்  வீட்டில் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்துவிட்ட பெற்றோர் அவரை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள்,  கார்த்திகேயன் வரும் வழியில் இறந்துவிட்டார்’ என்று தெரிவித்தனர். இதுபற்றி அறிந்ததும் திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்….

The post திருமுல்லைவாயலில் வேலை கிடைக்காத விரக்தி இன்ஜினியர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tirumullaivayal ,Thirumullaivayal ,Aavadi ,Cholampedu ,Pilliyar Koil Street ,
× RELATED சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய...