×

ஓஎன்ஜிசி தளவாட பொருட்கள் ஏற்றி சென்ற லாரியை சிறை பிடித்து மக்கள் போராட்டம்

குத்தாலம்: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவேள்விக்குடியில் 25 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் கிணறு உள்ளது. இங்கு குத்தாலம் எரிவாயு சேமிப்பு மையத்திலிருந்து கடந்த 10 நாட்களாக தளவாட பொருட்களை லாரிகளில் ஏற்றி வந்து 15க்கும் மேற்பட்ட ஊழியர்கள் துளை போடும் ரீக் மூலம் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் பொதுமக்கள், விவசாயிகள் குத்தாலம் எரிவாயு சேமிப்பு மையத்திலிருந்து தளவாட பொருட்களை ஏற்றி வந்த லாரியை நேற்று சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள நிலையில் எண்ணெய் கிணறுகளில் பராமரிப்பு பணி என்ற பெயரில் புதிய எண்ணெய் கிணறு அமைக்க முயற்சிப்பதாக கூறி ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக முழக்கமிட்டனர். இந்த போராட்டம் 2 மணி நேரம் நீடித்தது. குத்தாலம் தாசில்தார் பிரான்ஸ்வா மற்றும் குத்தாலம் போலீசார், ஓஎன்ஜிசி பாதுகாப்பு ஆய்வாளர் பத்மநாதன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து தளவாட பொருட்களை ஏற்றி வந்த லாரியை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். இதையடுத்து போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்….

The post ஓஎன்ஜிசி தளவாட பொருட்கள் ஏற்றி சென்ற லாரியை சிறை பிடித்து மக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : ONGC ,Kutthalam ,Tiruvelvikudi ,Mayiladuthurai ,
× RELATED காரைக்கால் ஓ.என்.ஜி.சி சார்பில் அரசு...