×

வாலிபர் கொலையில் 8 பேர் கைது

திருவொற்றியூர்: திருவொற்றியூர் தாங்கல் தெருவை சேர்ந்தவர்கள் ஹரிதாஸ்(24). சக்திவேல்(44), இரு தினங்களுக்கு முன்பு இருவரும் மணலி புதுநகர் அருகே பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த ஒரு கும்பல் தகராறில் ஈடுபட்டது. அப்போது, வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியது. இதில் சக்திவேல், ஹரிதாசுக்கு தலை, உடல் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடியது. புகாரின்படி மணலி புது நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்(26), ஆசைமணி(26), பிரவீன்(25), அன்பரசன்(25), முருகவேல்(22), மாதவன்(25), மருதமுத்து(29), விக்னேஷ்(28) ஆகிய 8 பேரை கைது செய்தனர். இவர்கள் சம்பவத்தன்று மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில், சிகிச்சையில் இருந்த ஹரிதாஸ் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கைதான 8 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது….

The post வாலிபர் கொலையில் 8 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : waliper ,street Haridas ,Shaktivel ,Manali Pudunagar ,Volyber ,
× RELATED திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில்...