×

இன்ஸ்டாகிராம் காதல் தோல்வியால் விரக்தி திருநங்கை தூக்கிட்டு தற்கொலை

தண்டையார்பேட்டை: காசிமேடு எம்ஜிஆர் நகர் குடிசை பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மனைவி ஜானகி. இவர்களது மகன் சரவணன்(17). கடந்த சில ஆண்டுகளாக அவர் பெண்மை தோற்றத்தில் மாறியதால் அவர் வீட்டில் இருந்து வௌியேறி ராயபுரத்தை சேர்ந்த ஆண்ட்ரியா என்ற திருநங்கை பாதுகாப்பில் வசித்து வந்தார். தனது வீட்டிற்கும் எப்போதாவது வந்து செல்வார். பெண்மை தோற்றத்தில் மாறியதால் தனது பெயரை ஐஸ்வர்யா என மாற்றிக் கொண்டார். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருந்த ஐஸ்வர்யா ஓசூரை சேர்ந்த மஞ்சுநாத் என்பவருடன் நண்பராக பழகி பின் காதலாக மாறியது. இருவரும்  கடந்த இரண்டு ஆண்டுகளாக இன்ஸ்டாகிராமில் காதலித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா தனது நிலையை மஞ்சுநாத்திடம் கூறினார். ஆனால் அதற்கு மஞ்சுநாத், `உன்னை திருமணம் செய்து கொள்ள எனது குடும்பத்தில் கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள். எனவே நான் விலகிக் கொள்கிறேன்’ என கூறினார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த ஐஸ்வர்யா நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ராயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஐஸ்வர்யா உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ராயபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. …

The post இன்ஸ்டாகிராம் காதல் தோல்வியால் விரக்தி திருநங்கை தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Instagram ,Bandarbate ,George ,Kasimedu Mgr Nagar ,janaki ,saravan ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...