×

‘என்னை உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டாம்’ கடிதம் எழுதி வைத்துவிட்டு வாலிபர் திடீர் தற்கொலை

சென்னை: தனது உடலை உடற்கூறு ஆய்வு செய்யவேண்டாம் என எழுதிவைத்துவிட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமாபுரம் பெரிய தெருவை சேர்ந்தவர் அர்ஜூன்(23), ராமாபுரத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பெற்றோர் கேரளாவில் வசிக்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை  அர்ஜூனனை அவரது நண்பர் சந்திக்க அறைக்கு வந்தார். நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தபோது அர்ஜூன் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  தகவலறிந்த ராயலா நகர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து   அர்ஜூனின் சடலத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், அர்ஜூன் தங்கியிருந்த வீட்டில் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது. அதில், ‘எனக்கு வாழப்பிடிக்கல. எல்லோரும் இருந்தும் நான் தனியா இருப்பதாத்தான் ஃபீல் பண்றேன். என்னால வாழ முடியல. என் வாழ்க்கை இப்படியே இருக்கு. அதனாலதா நான் சாகப்போறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என்னுடைய கடைசி ஆசை, என் உடலை போஸ்ட்மாடம் செய்ய வேண்டாம். உடலை பெற்றோரிடம் ஒப்படையுங்கள்’ என எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.மேலும், தற்போது அர்ஜூனுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததும் தெரியவந்தது. அர்ஜூனனை காதலிப்பதாக கூறிய பெண் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அதன்பிறகு தான் அர்ஜூன் தற்கொலை செய்து கொண்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அர்ஜூன் காதல் தோல்வியால் தான் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். அர்ஜூன் வைத்திருந்த செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

The post ‘என்னை உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டாம்’ கடிதம் எழுதி வைத்துவிட்டு வாலிபர் திடீர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Valibur ,Ramapuram ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டம் ராமாபுரம் ஊராட்சியில் பெண் அடித்துக் கொலை!!