×

வாஷிங்டன் பனிப்பொழிவில் பனிப்பந்துகளை எறிந்து விளையாடிய மக்கள்!!!

வாசிங்டன்: அமெரிக்காவில் வாஷிங்டன் பகுதியில் நிலவும் கடும் பனிப்பொழிவை அங்குள்ள மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வாஷிங்டன் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால் பள்ளிகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. மோசமான வானிலை காரணமாக ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பல்வேறு பகுதிகளில் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பல அடி உயரத்திற்கு பனி சூழ்ந்துள்ளது.வாஷிங்டனில் உள்ள நேஷனல் மாலில் முகநூல் குழுவின் சார்பில் பனிப்பந்துகளை வீசி எறியும் விளையாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரானை வெற்றி கொள்வோம் எனும் நோக்கில் இந்த நிகழ்ச்சிக்கு battle of snowfican என பெயரிடப்பட்டது. பொதுமக்கள் இரு பிரிவுகளாக பிரிந்து ஒருவர் மீது ஒருவர் பனிப்பந்துகளை எறிந்து தங்கள் மகிழ்ச்சையை வெளிப்படுத்தினர்.     …

The post வாஷிங்டன் பனிப்பொழிவில் பனிப்பந்துகளை எறிந்து விளையாடிய மக்கள்!!! appeared first on Dinakaran.

Tags : Washington ,United States ,Washington snowfall ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் போராட்டத்தை...