×

தரைப்பாலத்தை கடந்தபோது வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்ட குடும்பம்: 3 பேர் மீட்பு; சிறுவனை மீட்கும் பணி தீவிரம்

பூந்தமல்லி: திருவேற்காடு அருகே அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால்(45), டெய்லர். இவரது மனைவி ராஜேஸ்வரி(40). இவர்களுக்கு குமரேசன்(13), சிபிராஜ்(10) என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று அடையாளம்பட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக மொபட்டில் 4 பேரும் வந்தனர். அப்போது, கடந்த 2 தினங்களாக பெய்த கனமழை காரணமாக கூவத்தில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வானகரத்தில் உள்ள தரைப்பாலத்தில் வெள்ளநீர் அதிக அளவில் சென்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தடையை மீறி தரைப்பாலத்தில் மொபட்டில் 4 பேரும் வந்தனர். அப்போது நீரின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டு நிலை தடுமாறி நீரில் நான்கு பேரும் கீழே விழுந்தனர்.அப்போது, அங்கிருந்தவர்கள் வேணுகோபால் அவரது மனைவி ராஜேஸ்வரி, இளைய மகன் சிபிராஜ் ஆகிய 3 பேரை மீட்டனர். மூத்த மகன் குமரேசன் மட்டும் நீரில் அடித்து செல்லப்பட்டான். இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு கோயம்பேடு மற்றும் ஜெ.ஜெ.நகர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீரில் அடித்து செல்லப்பட்ட குமரேசனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், குமரேசன் வாய் பேச முடியாதவன் என கூறப்படுகிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

The post தரைப்பாலத்தை கடந்தபோது வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்ட குடும்பம்: 3 பேர் மீட்பு; சிறுவனை மீட்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Venugopal ,Ayanambakkam ,Thiruvekkadu ,Rajeshwari ,Kumaresan ,Sibiraj ,
× RELATED வாலிபரை வெட்டிய வழக்கில் நீதிமன்றத்தில் இருவர் சரண்