×

வில்லியனூர் அருகே படுகை அணை உடைப்பை மண் மூட்டைகளால் சீரமைப்பதா?

*பொதுமக்கள் எதிர்ப்பு*புதிய அணை கட்ட கோரிக்கைவில்லியனூர் :  வில்லியனூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பம்- செல்லிப்பட்டு இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில் படுகை அணை கட்டப்பட்டது. மழைக்காலங்களில் வீடூர் அணை திறக்கப்பட்டு. அதன் உபரி நீர் சங்கராபரணி ஆற்றில் வரும்போது படுகை அணை நிரம்பி  தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் சுற்றுவட்டார கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது, அடுத்த மழைக்காலம் வரும் வரை தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் இருக்கும். இந்நிலையில் கடந்த காலங்களில் இந்த படுகை அணையை சீரமைக்காமல் கிடப்பில் போட்டதால் அணையானது நாளடைவில் பலவீனம் அடைந்து உடைய தொடங்கியது. அப்போதெல்லாம் ஆற்றில் தண்ணீர் வரும்போது மண் மூட்டைகளை கொண்டு கரையை பலப்படுத்துவார்கள். ஆனால் மீண்டும் அந்த மண் மூட்டைகள் தண்ணீர் அடித்து சென்று விடும். இச்சம்பவம் தொடர்கதையாகி வந்த நிலையில், இந்தாண்டு பருவமழையை முன்னிட்டு அணையை பலப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆற்றில் வந்த வெள்ளப்பெருக்கில் படுகை அணை முற்றிலுமாக உடைந்து, தண்ணீர் அணைத்தும் வெளியேறி வருகிறது. இதனால் இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கோடை காலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.  இந்த நிலையில் தற்போது கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது போல் உடைந்துள்ள படுகை அணையை முன்கூட்டியே சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது களிமண்ணை  கொட்டி, மண் மூட்டைகளை அடுக்கி, தண்ணீரை தடுக்க பொதுப்பணித்துறை முயற்சி செய்து வருகிறது. இதனை அப்பகுதி மக்கள், பெயருக்கென அணை சீரமைப்பது போல் நாடகமாடி வரிப்பணத்தை வீணடிக்கிறார்கள் என்றும், தற்போது மண் மூட்டைகளை அடுக்கினால் அடுத்த மழைக்காலம் வரை யாரும் வர மாட்டார்கள் என்றும் கூறி பணியை தடுத்து நிறுத்தினர். ஆனால் பொதுப்பணித்துறையினர் இரவோடு இரவாக மண்  மூட்டைகளை அடுக்கிவிட்டு சென்றுள்ளனர். தற்போது வீடூர் அணையில் இருந்து மீண்டும் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் இந்த மண் மூட்டைகளை அடித்து சென்றுவிடும். எனவே எங்கள் பகுதியில் உள்ள இந்த படுகை அணையை மேம்படுத்தி, புதிய அணை கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post வில்லியனூர் அருகே படுகை அணை உடைப்பை மண் மூட்டைகளால் சீரமைப்பதா? appeared first on Dinakaran.

Tags : Willianur ,Villayanur ,Sankaraparani River ,Pilliyarkuppam-Sellipattu ,Dinakaran ,
× RELATED வில்லியனூர் அருகே முன்விரோத தகராறில் வாலிபர் அடித்து கொலை