×
Saravana Stores

வளர்ப்பு நாய்குட்டிகள் இறந்ததால் கணவருடன் தகராறு; பெண் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வளர்ப்பு நாய்க்குட்டி கழிவுநீர் கால்வாயில் விழுந்து இறந்ததால் கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் திருவீதிபள்ளம் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் டிகேஸ்வரன். இவரது மனைவி கிரிஜா (42). செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். டிகேஸ்வரன் மதுரவாயல் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் 20 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

இவர்களுக்கு குழந்தை இல்லாததால் நாய் வளர்த்து வந்தனர். தற்போது இந்த நாய் 5 குட்டிகள் ஈன்றுள்ளது. மேலும் 2 குட்டிகள் போடும் என டிகேஸ்வரன் கூறியிருந்த நிலையில் அதன்படி 2 குட்டிகள் ஈன்றுள்ளது. இந்த குட்டிகள் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் விழுந்து இறந்துள்ளது. இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு செல்போனில் மனைவியுடன் தொடர்புகொண்ட டிகேஸ்வரன், 2 குழந்தைகளை சாகடித்துவிட்டாயே என கேட்டு சண்டை போட்டுள்ளார்.

இதனால் மனமுடைந்த கிரிஜா, வீட்டில் உள்ள மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சிறிதுநேரம் கழித்து பலமுறை டிகேஸ்வரன் மனைவிக்கு போன் செய்துள்ளார். ஆனால் எடுக்கவில்லையாம். இதனால் சந்தேக மடைந்த டிகேஸ்வரன், உறவினர்களுக்கு போன் செய்து மனைவியை பார்க்கும்படி கூறியுள்ளார். அதன்படி உறவினர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது கிரிஜா தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்த தகவலறிந்ததும் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கிரிஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

The post வளர்ப்பு நாய்குட்டிகள் இறந்ததால் கணவருடன் தகராறு; பெண் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kancheepuram ,Tigeswaran ,Kanchipuram Thiruvetipallam Residential Area ,Krija ,Chengalpattu ,
× RELATED காஞ்சிபுரம் ஆர்டிஓ அலுவலகத்தில்...