×
Saravana Stores

ஓட்டப்பிடாரத்தில் மகளிர் குழுக்களுக்கு ₹1.50 கோடி கடனுதவி

ஓட்டப்பிடாரம், அக். 26:தூத்துக்குடி மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஓட்டப்பிடாரம் வட்டார அளவிலான மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. யூனியன் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக யூனியன் சேர்மன் ரமேஷ் கலந்து கொண்டு ₹1 கோடியே 50 லட்சத்திற்கான காசோலைகளை பல்வேறு மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வழங்கினார்.

மேலும் தமிழக அரசு, மகளிருக்காக செயல்படுத்தி வரும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் பிடிஓக்கள் வசந்தா, சித்தார்த்தன் (ஊராட்சிகள்), மாவட்ட மகளிர் திட்ட உதவி அலுவலர் கனகராஜ், எஸ்பிஐ ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலைய ஒருங்கிணைப்பாளர் தினேஷ் மணி, மகளிர் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஓட்டப்பிடாரத்தில் மகளிர் குழுக்களுக்கு ₹1.50 கோடி கடனுதவி appeared first on Dinakaran.

Tags : Ottapidara ,Ottapidaram ,Thoothukudi District Rural Livelihood Movement ,Union Chairman ,Ramesh ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது...