×
Saravana Stores

முதல்வருக்கு அரசு ஊழியர்கள் நன்றி தெரிவிப்பு

ராமநாதபுரம், அக்.26: தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்,ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3% அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளார். இதற்கு ஆசிரியர் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பினர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முருகேசன் கூறும்போது, கடந்த ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டியிருந்த அகவிலைப்படி உயர்வை, திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு கிடைத்து வருகிறது. தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள 3% அகவிலைப்படி உயர்வால், 16 லட்சம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் போன்றோர் பயனடைய உள்ளனர். எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

The post முதல்வருக்கு அரசு ஊழியர்கள் நன்றி தெரிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Ramanathapuram ,M.K.Stalin ,Tamil Nadu ,Teachers' Government Employees Federation ,Ramanathapuram District ,Tamil Nadu Teachers' Advancement Association ,
× RELATED நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள்...