×
Saravana Stores

நத்தம் பேரூராட்சியில் தூய்மை காவவலர்களுக்கு சமபந்தி விருந்து அளிப்பு

நத்தம், அக். 25: நத்தம் பேரூராட்சி சார்பில் சிறப்பாக பணிபுரிந்து வரும் அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு சமபந்தி விருந்து அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா தலைமை வகித்தார். துணை தலைவர் மகேஸ்வரி சரவணன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அனைவருக்கும் சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது. இதில் வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தூய்மை காவலர்களுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

The post நத்தம் பேரூராட்சியில் தூய்மை காவவலர்களுக்கு சமபந்தி விருந்து அளிப்பு appeared first on Dinakaran.

Tags : Samabandi ,Natham Municipality ,Natham ,Municipal President ,Shek Sikandar Bhatsa ,Vice President ,Maheshwari Saravanan ,Dinakaran ,
× RELATED நத்தம் அருகே 10 அடிநீள மலைப்பாம்பு உயிருடன் மீட்பு