×

ஒரே நேரத்தில் 17 படங்களில் நடிக்கும் சரத்குமார்

சென்னை: ஒரே நேரத்தில் 17 படங்களில் நடிப்பது பற்றி சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: தற்போது ‘கஸ்டடி’, ‘நாநா’, ‘நிறங்கள் மூன்று’, ‘போர் தொழில்’, ‘பரம்பொருள்’, ‘கிரிமினல்’, ‘ஆழி’, ‘ஹிட் லிஸ்ட்’, ‘என்கவுண்டர்’ உள்பட 13 படங்களில் நடித்து முடித்துள்ளேன், ‘பயணம்’ என்ற வெப்சீரிசிலும் நடித்துள்ளேன். மேலும் 4 படங்களில் நடிக்கிறேன். எனது 150வது படமாக ‘ஸ்மைல் மேன்’ உருவாகிறது. இதில், விபத்தில் சிக்கி நினைவாற்றல் இழந்த போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். நான் எப்படி ஒரு கொலையாளியைக் கண்டுபிடிக்கிறேன் என்பது கதை. இப்படம் தமிழிலும், மலையாளத்திலும் உருவாகிறது. ஷாம், பிரவீன் இணைந்து இயக்குகின்றனர். அடுத்து ‘பரம்பரா’ வெப்சீரிசின் 3வது பாகத்தில் நடிக்கிறேன். ‘அடங்காதே’, ‘கிடா சண்ட’, ‘டாக்ஸி’ ஆகிய படங்களிலும் நடிக்கிறேன். ‘சூர்ய வம்சம்’ படத்தின் 2ம் பாகம் விரைவில் உருவாகும். ‘சூரியன்’ படத்தின் 2ம் பாகமும் உருவாகிறது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்திலும், சேரன் இயக்கும் வெப்தொடரிலும் நடிக்கிறேன்.

The post ஒரே நேரத்தில் 17 படங்களில் நடிக்கும் சரத்குமார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Saradkumar ,Chennai ,Sarathkumar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சொல்லிட்டாங்க…