×

மழையினால் மின்சாரம் பாய்ந்து 2பேர் பலி

பெரம்பூர்: சென்னை ஓட்டேரி பென்சினர் லைன் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசி (70). தனது மகளுடன் வசித்து வருகிறார்.நேற்று மாலை மழை சற்று குறைந்து இருந்தபோது தமிழரசி நியூ பேரன்ட்ஸ் ரோடு வழியாக கடைவீதிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் உள்ள அம்மா உணவகம் அருகே வரும்போது தண்ணீரில் கால்வைத்த போது மின்சாரம் பாய்ந்து மூதாட்டி தூக்கி வீசப்பட்டார். தகவலறிந்த ஓட்டேரி போலீசார் மின்வாரிய ஊழியர்களை வரவைத்து அப்பகுதியில் மின்சாரத்தை தடை செய்து மூதாட்டியின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் சென்னை புளியந்தோப்பு அம்மையம்மாள் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பியாரிலால் (50). இவரது மனைவி மீனா (45), உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவர்கள்  கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக புளியந்தோப்பு பகுதியில் வசித்து  வருகின்றனர் இவர்களுக்கு மொய்த்குமார் (25), ரேணு (20) என்ற மகன், மகள் உள்ளனர். பியாரிலால் பேசின் பிரிட்ஜ் பகுதியில் சுண்டல் வியாபாரம் செய்து  வருகிறார். நேற்று மாலை முதல் பெய்த கனமழை காரணமாக புளியந்தோப்பு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி அடிக்கடி மின்சாரம் தடைபட்டது. இந்நிலையில் மீனா நேற்று கடைக்கு செல்ல வீட்டு வாசலில் இருந்த  இரும்பு கிரில் கேட்டை பிடித்துக் கொண்டு வெளியே காலை வைத்தபோது மின்சாரம் பாய்ந்து இறந்தார். …

The post மழையினால் மின்சாரம் பாய்ந்து 2பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Perambur ,Tamilarasi ,Otteri Pensioner Line ,Chennai ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு