×
Saravana Stores

இளம்பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு

மதுரை, அக். 24: உசிலம்பட்டியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி(48). இவரது மகள் யாஷிகா(21). இவருக்கும் நிரேஷ் என்பவருக்கும் 2022ம் ஆண்டு திருமணம் நடந்தது. மதுரை, கரிமேட்டில் வசித்த இவர்களுக்கு, ஒரு மகன் உள்ளார். இந்தநிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், யாஷிகா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கரிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.  l மதுரை சிந்தாமணி மெயின் ரோடு செபஸ்தியார் புரத்தை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ்(66).

இவரது மனைவி செபஸ்தியம்மாள். இவர்களின் இளையமகள் சமீபத்தில் உயிரிழந்தார். இந்த வேதனையில் இருந்த ஆரோக்கியதாஸ், வீட்டில் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கீரைத்துறை போலீசார் விசாரிக்கின்றனர். l மதுரை, ஊமச்சிகுளத்தை அடுத்த வீரபாண்டியை சேர்ந்தவர் சந்திரசேகர்(65). கூலித்தொழிலாளியான இவர், மதுரை மீனாட்சி அம்மன் பூங்கா அருகே மயங்கிய நிலையில் இருந்துள்ளார். மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

The post இளம்பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Chelapandy ,Usilampatti ,Yashika ,Niresh ,Garimet, Madurai ,
× RELATED மதுரை முல்லை நகரில் மழைநீரை வெளியேற்ற கான்கிரீட் சாலை உடைப்பு..!!