×

நிறைய துப்பாக்கிகள் என்னை பின்தொடர்கின்றன

மும்பை: பாலிவுட் முன்னணி ஹீரோ சல்மான்கானுக்கு பஞ்சாப் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதால், சல்மான்கானுக்கு மும்பை காவல்துறை சார்பில் ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மான்கான் அளித்துள்ள பேட்டியில், ‘எனக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சாலையில் சாதாரணமாக சைக்கிள் ஓட்டிக்கொண்டு செல்ல முடியவில்லை.

பொது இடங்களில் பயணிக்கும்போது டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. அது மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எல்லா இடங்களுக்கும் அதிக பாதுகாப்பு டன் செல்கிறேன். நீங்கள் என்ன செய்தாலும், என்ன நடக்க வேண்டும் என்று விதி இருக்கிறதோ அது நடந்தே தீரும். நான் கடவுளை நம்புகிறேன். அதற்காக எல்லா இடங்களிலும் சுதந்திரமாக சென்று வருவேன் என்று அர்த்தம் கிடையாது.என்னைச் சுற்றி நிறைய துப்பாக்கிகள் பின்தொடர் கின்றன’ என்று பரபரப்பாகப் பேசியுள்ளார்.

The post நிறைய துப்பாக்கிகள் என்னை பின்தொடர்கின்றன appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : MUMBAI ,Bollywood ,Salman Khan ,Mumbai Police ,Punjab ,Dada ,Lawrence Bishnoi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நடிகர் சல்மான்கான் வீடு அருகே நடந்த...