×
Saravana Stores

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுபான கடையை அகற்ற வேண்டும்

 

தஞ்சாவூர், அக். 22: மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணை ந்த தஞ்சை மாவட்ட மற்றும் மாநகர ஆலோசனை கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் பாளை ரஃபிக் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் சையத் அலி மற்றும் மாநில செயலாளர் ஜலால் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். இதில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்ய ப்பட்டனர்.மாநிலத் துணைச் செயலாளர் முகமது அப்துல்காதர், தஞ்சை மாவட்ட தலைவர் இப்ராம்ஷா, மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள், முகமது யூசுப் அப்துல் மஜீத், இமாம் காசிம், முகமது உசேன், கலந்து கொண்டனர். தென் மண்டல அமைப்பு துணைச் செயலாளர் தாஜுதீன் நன்றி கூறினார்.

கூட்டத்தில்,தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே, வழிபாட்டு தலமான அல் அன்சர் ஜும்மா பள்ளிவாசல், குடியிருப்பு, கல்லூரி, மருத்துவமனை பகுதியில் அமைந்துள்ள மதுபானக் கடையை உடனே அகற்ற வேண்டும். கீழவாசல் எஸ்என்எம் ரஹ்மான் நகர், அப்துல் கலாம் பூங்கா, நேரு பூங்கா ஆகிய மாநகராட்சி பூங்காக்களை பராமரித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுபான கடையை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Thanjai New Bus Station ,Thanjavur ,Nda ,Thanjai District ,Humanist People's Development Corporation ,State President ,Pali Rafiq ,Vice President ,Syed Ali ,Tanjai ,new bus station ,Dinakaran ,
× RELATED தஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள அதிமுக...