×
Saravana Stores

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மின்வாரிய அதிகாரி பலி

திருவொற்றியூர்: மீஞ்சூர், தேவதானம் பகுதியை சேர்ந்தவர் பாலு (54). மணலி துணை மின் நிலையத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு மணலி எம்.எப்.எல் சந்திப்பில் சாலையை கடக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post அடையாளம் தெரியாத வாகனம் மோதி மின்வாரிய அதிகாரி பலி appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Balu ,Devadanam, Meenjur ,Manali ,Manali MFL junction ,
× RELATED திருவொற்றியூரில் சோகம் தந்தை, மகன்,...