×
Saravana Stores

நாளை உங்களைத் தேடி திட்டம்

 

சிவகங்கை, அக்.21: காரைக்குடியில் நாளை உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கலெக்டர் உள்ளிட்ட மாவட்ட அனைத்து உயர் அலுவலர்களும் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்வர்.

இதனடிப்படையில் நாளை ஒரு நாள் முழுவதும் கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் காரைக்குடி வட்டத்தில் தங்கி இருந்து ஆய்வு செய்து நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்வர். தொடர்ந்து காரைக்குடி பி.எல்.பி மஹாலில் நாளை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பொதுமக்கள் மற்றும் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்களின் குறைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாளை உங்களைத் தேடி திட்டம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Karaikudi ,
× RELATED கை, கழுத்து அறுபட்டு சாலையில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு