×
Saravana Stores

கருணை அடிப்படையில் வேலை வழங்க கோரி நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள்ஆர்ப்பாட்டம்

 

நாகப்பட்டினம்அக்,19:தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார். வட்ட தலைவர் ரமேஷ் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும்.

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் உதயக்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், பொருளாளர் அந்துவண்சேரல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post கருணை அடிப்படையில் வேலை வழங்க கோரி நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள்ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Nagapattinam Divisional Engineer's Office ,Tamil Nadu Government Highways Department Road Workers Union ,Ganesan ,Circle ,President ,Ramesh ,Tamil Nadu Government Employees Union ,Highways Department ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் காவல்துறை சார்பில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு