×
Saravana Stores

அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் பேச்சு, கட்டுரைப் போட்டி

காரைக்குடி, அக். 19: காரைக்குடி அழகப்பசெட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறை மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் மாணவர் மன்றம் சார்பில் பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டி நடந்தது. ஆங்கிலத்துறை பேராசிரியர் ராஜாமணி வரவேற்றார். மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறைத்தலைவர் சிவானந்தராஜா தலைமை வகித்தார். கணிதவியல் துறை பேராசிரியர் பாலசுந்தர் வாழ்த்துரை வழங்கினார். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் முனைவர் பாஸ்கரன் பாராட்டினார். போட்டிகளுக்கு நடுவர்களாக பேராசிரியர்கள் சிந்தியா, சுஹைலா ஆகியோர் செயல்பட்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, 2ம் பரிசாக ரூ.3000, 3வது பரிசாக ரூ.2000 வழங்கப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை முத்தமிழ்மன்ற மாணவ ஒருங்கிணைப்பாளர்கள், மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறையினர் செய்திருந்தனர்.

The post அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் பேச்சு, கட்டுரைப் போட்டி appeared first on Dinakaran.

Tags : Alagappa Government Engineering College ,Karaikudi ,Department of Tamil Development ,Government of Tamil Nadu ,Muthamizharinagar Artist Students' Forum ,Alagapasetyar Government College of Engineering and Technology ,Rajamani ,Department of English ,Speech and Essay Competition ,Dinakaran ,
× RELATED நாளை உங்களைத் தேடி திட்டம்