×

வெள்ளனூர், மாத்தூர் தொழிற்பேட்டைகளில் காலி தொழில் மனைகள் ஒதுக்கீட்டிற்கு தயார்

 

புதுக்கோட்டை,அக்.18:புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்பேட்டைகளில் காலி தொழில்மனைகள் ஒதுக்கீட்டிற்கு தயாராக உள்ளது. வெள்ளனூர், மாத்தூர், ஆலங்குடி ஆகிய இடங்களில் புதிதாக தொழில் தொடங்க தொழில்மனைகள் வாங்க விரும்புவோர் www.tansidco.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

காலி தொழில் மனைகளை பார்வையிட கிளை மேலாளரின் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. கிளை மேலாளர் பெயர் குணாளன். அலுவலக முகவரி கிளை மேலாளர், சிட்கோ கிளை அலுவலகம், மச்சுவாடி, புதுக்கோட்டை-622004. கைபேசி எண் 9445006560. மின்னஞ்சல் முகவரி bmpdk@tansidco.org ஆகும்.இந்த தகவலை கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

The post வெள்ளனூர், மாத்தூர் தொழிற்பேட்டைகளில் காலி தொழில் மனைகள் ஒதுக்கீட்டிற்கு தயார் appeared first on Dinakaran.

Tags : Vellanur ,Mathur ,Pudukottai ,Tamil Nadu CITCO ,Pudukottai district ,Vellanoor, Mathur, Alangudi ,
× RELATED வலங்கைமான் அருகே வெட்டாற்றில் புதிய பாலம்