×

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் பால் வியாபாரி கைது

புளியங்குடி, அக்.18: தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகேயுள்ள கடம்பன்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாரிப்பாண்டி மகன் அருண் (20). பிபிஏ 2ம் ஆண்டு வரை படித்துள்ள இவர் தற்போது பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் புளியங்குடி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், புளியங்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து பால் வியாபாரி அருணை கைது செய்தார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

The post கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் பால் வியாபாரி கைது appeared first on Dinakaran.

Tags : Bokso ,Puliangudi ,Arun ,Maripandi ,Kadambankulam ,Prethamaram, Tenkasi district ,BBA ,
× RELATED புளியங்குடி அருகே பரிதாபம் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி பலி