×

குட்கா விற்ற 3 கடைகளுக்கு சீல்

தர்மபுரி, அக்.18: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி, பாளையம்புதூர், தண்டுக்காரம்பட்டி ஆகிய ஊர்களில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுகிறதா என நேற்று டீக்கடைகள், பெட்டி கடைகளில் நல்லம்பள்ளி உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி மற்றும் குழுவினர் சோதனை செய்தனர். இந்த சோதனையில், மூன்று கடைகளில் குட்கா விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 கடைகளையும் பூட்டி சீல் வைக்கப்பட்டு, ஒரு கடைக்கு ₹50 ஆயிரம், மற்ற 2 கடைகளுக்கு தலா ₹25ஆயிரம் வீதம் மொத்தம் ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனையில் அதியமான்கோட்டை எஸ்எஸ்ஐ சிவராஜ் மற்றும் ஏட்டு சரவணன் ஆகியோர் ஈடுபட்டனர்.

The post குட்கா விற்ற 3 கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Gutka ,Dharmapuri ,Nallampally ,Food Safety Officer ,Kandasamy ,Palayambudur ,Tandukarampatti ,Dinakaran ,
× RELATED சித்தியை தாக்கிய வாலிபர் கைது