×

கடைகளில் 350 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் ₹25 ஆயிரம் அபராதம் ஆரணி நகராட்சி அதிகாரிகள் அதிரடி

ஆரணி, அக்.18: ஆரணியில் உள்ள கடைகளில் சோதனை நடத்திய நகராட்சி அதிகாரிகள் தடை செய்யப்பட்ட 350 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். ஆரணி டவுன் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதாக, நகராட்சி ஆணையாளருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பழனி உத்தரவின்பேரில், சுகாதார ஆய்வாளர் வடிவேல் தலைமையில், துப்புரவு மேற்பார்வையாளர்கள் பிரதாப், குமார், அண்ணாமலை, பாபுஜி ஆகியோர் ஆரணி பழைய, புதிய பஸ் நிலையம், காந்தி சாலை, அண்ணா சிலை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் உள்ள 15க்கும் கடைகள் மற்றும் குடோன்களில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ₹85 ஆயிரம் மதிப்பிலான 350 கிலோ பிளாஸ்டிக் கவர், கிளாஸ் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கடை உரிமையாளர்களுக்கு ₹25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்தால், ₹25 ஆயிரம் முதல் ₹1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

The post கடைகளில் 350 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் ₹25 ஆயிரம் அபராதம் ஆரணி நகராட்சி அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Arani ,Arani Town ,Dinakaran ,
× RELATED போதை பொருள் பதுக்கி விற்ற தந்தை, மகன் கைது ஆரணி அருகே வீடு, கடையில்