×

குறை தீர் முகாமில் 75 மனுக்களுக்கு தீர்வு

தர்மபுரி, அக்.17: தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில், 75 புகார் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு தர்மபுரி மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் தலைமை வகித்தார். முகாமில் மாவட்டம் முழுவதும் 31 போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு, சொத்து தகராறு, பொது வழி பிரச்னை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மொத்தம் 75 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 75 மனுக்கள் மீது விசாரணை முடித்து தீர்வு காணப்பட்டது. நேற்று நடந்த முகாமில் புதியதாக 23 மனுக்கள் பெறப்பட்டது. முகாமில் ஏடிஎஸ்பி ஸ்ரீதரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் எஸ்ஐகள், போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post குறை தீர் முகாமில் 75 மனுக்களுக்கு தீர்வு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri District Police Department ,Dharmapuri District Police ,Kurdi Tir ,Dinakaran ,
× RELATED காவல்துறை வாகனங்களை எஸ்பி ஆய்வு