×

வங்கி கணக்கில் மானிய தொகையை உறுதிப்படுத்த வேண்டும்

 

கொள்ளிடம்,அக்.16: கொள்ளிடம் பகுதி விவசாயிகளின் வங்கி கணக்கில் குறுவைத் தொகுப்பு மானியம் வரப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேளாண் உதவி இயக்குனர் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் எழில்ராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொள்ளிடம் வட்டாரத்தில், வேளாண்மைத்துறை மூலம் குறுவை தொகுப்புத் திட்டம் 2024-25-ன் கீழ் இயந்திர நடவு மானியத்திற்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு, மானியத் தொகையானது சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருவதால், விவசாயிகள் தங்களுடைய வங்கி சேமிப்புக்கணக்கில் மானியத்தொகை வரவு வைக்கப்பட்ட விவரத்தினை உறுதி செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள வேளாண் உதவி அலுவலர்களை தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post வங்கி கணக்கில் மானிய தொகையை உறுதிப்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Kollidam ,Assistant Director ,Mayiladuthurai District ,Kollid ,District ,Agricultural ,Eshilraja ,Dinakaran ,
× RELATED கொள்ளிடத்தில் பயனற்று கிடக்கும்...