×
Saravana Stores

மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

 

வேதாரண்யம், அக்.15: வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் ஆர்விஎஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் நாகையில் நடந்த மாவட்ட அளவிலான சதுரங்கபோட்டியில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தேர்வானதை ஒட்டி பாராட்டு விழா நடைபெற்றது. நாகையில் நடந்த மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில்ஆயக்காரன்புலம் ஆர்விஎஸ் பள்ளி 12ம் வகுப்பு மாணவர்
கவிபாரதி 2-ம் இடத்திலும்,10ம் வகுப்பு மாணவன்அருண் மாறன் மூன்றாம் இடத்திலும்வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தேர்வாகினர்.இந்நிலையில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளித் தாளாளர் சுவாமிநாதன் தலைமை வகித்தார்.பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலு முன்னிலை வகித்தார்.பள்ளியில் நடந்த விழாவில் மாநில போட்டிகளுக்கு தேர்வு பெற்ற மாணவர்களுக்கும் பயிற்சி அளித்த விளையாட்டு ஆசிரியர் ஜெலெந்திரனுக்கும் பாராட்டு நடந்தது. விழாவில், மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜெயபால், துணை முதல்வர் லதா, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாதவன், நிர்வாக அலுவலர் ராஜசிங்கம் உட்பட ஆசிரியர்களும், அலுவலர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

The post மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Ayakaranpulam RVS Matric School ,Nagai ,Dinakaran ,
× RELATED நாகை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு...