×
Saravana Stores

தேனி அருகே மதுபாட்டில் விற்றவர்கள் கைது

தேனி, அக். 15: தேனி அருகே பின்னத்தேவன்பட்டியில் மளிகைக் கடையில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனை செய்த பெண்ணை கைது செய்தபோலீசார் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். தேனி அருகே பின்னத்தேவன்பட்டியில் அல்லிநகரம் போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் கோகுலகண்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, இப்பகுதியில் மளிகைக் கடையில் அரசு அனுமதியின்றி மது விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அக்கடையில் சோதனையிட்டபோது, விற்பனைக்காக 9 மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, மது விற்பனையில் ஈடுபட்ட பாண்டி மனைவி பஞ்சம்மாள்(47) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல பழனிசெட்டிபட்டி போலீசார் கோடாங்கிபட்டி டாஸ்மாக் கடை அருகே ரோந்து சென்றபோது, அப்பகுதியில் அரசு அனுமதியின்றி மதுவிற்பனையில் ஈடுபட்ட போஸ்(57) என்பவரிடமிருந்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் இத்ரிஸ்கான் புகாரின்பேரில் போஸ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

The post தேனி அருகே மதுபாட்டில் விற்றவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Theni ,Pinnathevanpatti ,Allinagaram ,Gokulakannan ,Binnathevanpatti ,Dinakaran ,
× RELATED தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை