×
Saravana Stores

காளிகேசம் கோயிலில் 17ம்தேதி பவுர்ணமி பூஜை

பூதப்பாண்டி, அக்.15 : இயற்கை எழில் மிகுந்த காளிகேசத்தில் அமைந்துள்ள காளி அம்மன் கோயிலில் வருகின்ற 17ம் தேதி (வியாழக்கிழமை) பவுர்ணமி பூஜை விழா நடைபெறுகிறது. அன்று காலை 7 மணிக்கு பக்தி இசை, 9 மணிக்கு ராஜமேளம், 9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 10 மணிக்கு உலக நன்மைக்காக பரசேரி சியாமளா விஸ்வேஸ்வரன் தலைமையில் லலிதா சகஸ்ரநாம பூஜை, பகல் 12 மணிக்கு நாதஸ்வர மேளம், மதியம் 1 மணிக்கு அலங்கார தீபாராதனை, 1.30 மணிக்கு அன்னதானம் ஆகிய நடக்கிறது. தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படுகிறது. பவுர்ணமி பூஜையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து காளிகேசத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. விழா ஏற்பாடுகளை காளிகேசம் காளி அம்மன் கோயில் சேவா அறக்கட்டளை நிர்வாக குழு மற்றும் பவுர்ணமி பூஜை வழிபாட்டு குழுவினரோடு பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.

The post காளிகேசம் கோயிலில் 17ம்தேதி பவுர்ணமி பூஜை appeared first on Dinakaran.

Tags : 17MDETI PURNAMI PUJA ,KALIGESAM TEMPLE Bothapandi ,Pournami Puja Festival ,Kali Amman Temple ,Rajamelam ,Purnami Pooja ,Kaligesam Temple ,
× RELATED ஐசிடி அகாடமி யூத் டாக் போட்டியில்...