×

கிழக்கு கடற்கரை சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட 15 வாலிபர்கள் கைது: போலீசார் நடவடிக்கை

துரைப்பாக்கம்: கிழக்கு கடற்கரை சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட 15 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். சென்னையில் முக்கிய சாலையாக கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இச்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களை அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டிச்செல்லும் வாகன ஓட்டிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இவ்வாறு, ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில், போக்குவரத்து போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதில், கானத்தூர் முதல் முட்டுக்காடு இடையே பைக் ரேசில் ஈடுபட்ட 15 இருசக்கர வாகனங்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வாகனங்கள் அதிக சிசி திறன்கொண்டவை, ஒவ்வொரு வாகனமும் ரூ.2 லட்சம் முதல் ரூ.19 லட்சம் வரை மதிப்புள்ளது. பைக்குகளை அதிவேகமாக ஓட்டி வந்தவர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். பின்னர், உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில், கைதானவர்களை எச்சரிக்கை செய்து, காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.

The post கிழக்கு கடற்கரை சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட 15 வாலிபர்கள் கைது: போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : East Coast Road ,Durai Pakkam ,Chennai ,Dinakaran ,
× RELATED கோவளம் கடற்கரையில் தொடர் மீன்...