×
Saravana Stores

சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் தசரா திருவிழா

 

ஏரல், அக்.14:சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் தசரா திருவிழாவில் அம்மன் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளி சிறுத்தொண்டநல்லூர் மற்றும் ஏரல் பகுதியில் நகர்வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏரல் அருகேயுள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் தசரா திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. முக்கிய தசரா திரு
விழாவான 12ம் தேதி இரவு 1 மணிக்கு அம்மனுக்கு தசரா சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளி சிறுத்தொண்டநல்லூர் பகுதியில் நகர் உலா வருதல் நிகழ்ச்சி நடந்தது. 13ம் தேதி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் அம்மன் கற்பக பொன் சப்பரத்தில் ஏரல் நட்டார் அம்மன் கோயிலுக்கு வந்து சேருதல், தொடர்ந்து அங்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்து அம்மன் புறப்பட்டு ஏரல் நகர் பகுதியில் உலா வருதல் மற்றும் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் வந்து சேருதல், அங்கு தாகசாந்தி மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.

தொடர்ந்து அம்மன் அங்கிருந்து புறப்பட்டு மெயின்பஜார் வழியாக சேனையர் சமுதாய உச்சினிமாகாளி அம்மன் கோயில் வந்து சேர்ந்து அங்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அங்கிருந்து புறப்பட்டு மதியம் அம்மன் ஏரல் பேட்டை பந்தலில் வந்து அமரும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் சார்பில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் புறப்பட்டு ஏரல் பகுதி வழியாக இன்று அதிகாலையில் சிறுத்தொண்டநல்லூர் கோயில் வந்து அமரும் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடந்தது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சிறுத்தொண்டநல்லூர் நான்கு பங்கு இந்து நாடார்கள் செய்து இருந்தனர்.

The post சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் தசரா திருவிழா appeared first on Dinakaran.

Tags : Siruthondanallur Muthumalai Amman Temple Dussehra Festival ,Arel ,Amman Karpaka Pon Chapparam ,Siruthondanallur ,
× RELATED ஏரல் அருகே ஆலங்கால் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படுமா?