×

அறந்தாங்கி அருகே கோயில் பூட்டை உடைத்து குடங்கள், குத்துவிளக்குகள் திருட்டு

 

அறந்தாங்கி, அக்.14: அறந்தாங்கி அருகே பாக்குடி முத்துமாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வளை வீச்சு புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பாக்குடி மற்றும் அதனைச்சுற்றி உள்ள 10 கிராமத்திற்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு உள்ளதை அப்பகுதியை சேரந்தவர்கள் பார்த்து ஆவுடையார்கோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோயிலுக்கு உள்ளே சென்று பார்த்தபோது கோயிலில் இருந்த 130க்கும் மேற்பட்ட பித்தளை குடங்கள், செம்புகுடங்கள், குத்துவிளக்குகள், பொங்கல் வைக்கும் பாத்திரங்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆவுடையார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

The post அறந்தாங்கி அருகே கோயில் பூட்டை உடைத்து குடங்கள், குத்துவிளக்குகள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Aranthangi ,Pakkudi Muthumariamman ,
× RELATED அறந்தாங்கியில் மழையை முன்னிட்டு பேரிடர் மீட்பு ஒத்திகை செயல்விளக்கம்