×

மார்த்தாண்டம் கல்வி அலுவலர் இடமாற்றம்

நாகர்கோவில், அக்.11: தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி விதிகளில் வகை 4ல் வரும் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிந்து வரும் அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி இடமாறுதல் வழங்கி தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 18 பேர் இவ்வாறு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மார்த்தாண்டம் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) செந்தில்குமார் இடமாறுதல் செய்யப்பட்டு மாவட்ட கல்வி அலுவலராக (தொடக்க கல்வி) சிவகாசிக்கு மாற்றப்பட்டுள்ளார். வள்ளியூர் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) ஷெர்லின் விமல் மார்த்தாண்டம் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஆக மாற்றப்பட்டுள்ளார். மாறுதல் அளிக்கப்பட்டுள்ள மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலர்களால் நியமனம் செய்யப்படும் பொறுப்பு அலுவலர்களிடம் தமது பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு உடனடியாக புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மார்த்தாண்டம் கல்வி அலுவலர் இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Marthandam ,Nagercoil ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பள்ளிக்கு லேட் ஆகிறது… ப்ளீஸ்… மேம்பாலத்தை விரைந்து சரி செய்யுங்கள்