×

சென்னையில் இருந்து துபாய்க்கு டெலஸ்கோப்களில் கடத்த முயன்ற ரூ.5.76 கோடி வைர கற்கள் பறிமுதல்

மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து துபாய்க்கு டெலஸ்கோப்களில் மறைத்து கடத்த முயன்ற ரூ.5.76 கோடி மதிப்புடைய 1052 காரட் வைரக்கற்களை சுங்கத்துறை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னையை சேர்ந்த வாலிபரை கைது செய்து விசாரிக்கின்றனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் ஏமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் சுங்கத்துறையினர் சோதனை நடத்தி அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அதோடு அவரது சூட்கேஸ், பைகளை திறந்து சோதனையிட்டனர். அதற்குள், 4 டெலஸ்கோப்கள் இருந்தது. அவற்றின் கைப்பிடிகளுக்குள் 22 சிறிய பிளாஸ்டிக் பைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அந்த பைகளில் பட்டை தீட்டப்பட்டு மெருகூட்டப்பட்ட வைர கற்கள் இருந்ததை கண்டுப்பிடித்தனர். மொத்தம் 1052 காரட். மதிப்பு ரூ.5.76 கோடி. அவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து விசாரித்தனர். இதில், ஆப்ரிக்க நாடுகளில் கிடைக்கும் பட்டை தீட்டப்படாத வைர கற்களை  இந்தியாவிற்கு கடத்தி வந்து, இங்கு பட்டை தீட்டி பாலீஸ் போட்டு, மெருகூட்டி  மீண்டும் வெளிநாட்டிற்கு கடத்த முயன்றது தெரிந்தது. அதே நேரத்தில், ஏற்கனவே காங்கோ நாட்டில் இருந்து சென்னைக்கு பட்டை தீட்டப்படாத வைர கற்களை கடத்தி வந்த மும்பையை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில்தான் இந்த வைர கற்கள் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தகக்து….

The post சென்னையில் இருந்து துபாய்க்கு டெலஸ்கோப்களில் கடத்த முயன்ற ரூ.5.76 கோடி வைர கற்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dubai ,Meenambakkam ,Tarithi ,
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்