×

தென்காசியில் பள்ளி கல்வித்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தென்காசி,அக்.10: தென்காசி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் மூன்று பேர் மீது பணியிடை நீக்கம், 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து முதன்மை கல்வி அலுவலர்
ஆணை பிறப்பித்துள்ளார். இதனை கண்டித்து நேற்று முதன்மை கல்வி அலுவலரின் விரோத போக்கை கண்டித்து தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சுப் பணியாளர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில தலைவர் முனியேஸ்வரன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் ராம்ஜி, மாநிலச் செயலாளர் பூர்ண சந்திரன், மாநில துணைத்தலைவர் சுப்பிரமணி முன்னிலை வகித்தனர். விருதுநகர் பாண்டுரங்கன், தேனி விஜயராகவன், மதுரை ரமணி பேபி, சிவகங்கை புவனேஸ்வரன், திருவாரூர் ஆவணி ராஜா, கன்னியாகுமரி சோலை, திண்டுக்கல் மகேஸ்வரி ஆகியோர் பேசினர். விருதுநகர் முனீஸ் கண்ணன் நன்றி கூறினார்.

The post தென்காசியில் பள்ளி கல்வித்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : School Education Ministry Employees Union ,Tenkasi ,Principal Education Officer ,Tenkasi District School Education Department ,School Education Ministry Staff Union ,Denkasi ,Dinakaran ,
× RELATED தென்காசியில் கரடி தாக்கியதில் பெண் காயம்