×
Saravana Stores

ஊதியூர் அருகே நாய் கடித்ததில் 14 ஆடுகள் படுகாயம்

 

காங்கயம், அக்.9: ஊதியூர் அருகே பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 14 ஆடுகளை நாய்கள் கடித்ததில் ஆடுகள் படுகாயம் அடைந்தன. காங்கயம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (38). இவருக்கு குள்ளம்பாளையம் அருகே தேங்காய் களம் மற்றும் தோட்டம் உள்ளது. அதில் 60 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வந்துள்ளனர். நேற்று காலை சென்று பார்த்த போது 14 ஆடுகளை, நாய்கள் கடித்ததில் படுகாயம் அடைந்துள்ளது. இதையடுத்து கால்நடைத்துறை மருத்துவர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. காங்கயம் வெள்ளகோவில் ஊதியூர் பகுதியில் தொடர்ந்து ஆடுகளை நாய்கள் கடித்து கொன்று வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

The post ஊதியூர் அருகே நாய் கடித்ததில் 14 ஆடுகள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Pedhgur ,Kangayam ,Pedgur ,Prakash ,Gangaim ,Kullampalayam ,Dinakaran ,
× RELATED காங்கயம் சட்ட மன்ற தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டம்