×
Saravana Stores

செந்துறை-பொன்பரப்பி இடையே சாலை அகலப்படுத்தும் பணி: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

 

அரியலூர், அக் 5: அரியலூரில் சாலை அகலப்படுத்தும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார். அரியலூர் (நெடுஞ்சாலை), கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, கோட்டத்தின் கட்டுபாட்டிலுள்ள செந்துறை உட்கோட்டத்தை சார்ந்த அரியலூர் – ஜெயங்கொண்டம் (வழி) செந்துறை சாலையில் செந்துறை முதல் பொன்பரப்பி வரை முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் இருவழிச்சாலையை நான்குவழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார்.

பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க அறிவுரைகள் வழங்கினார். மேலும் ஆய்வின்போது உடன் மாவட்ட கலெக்டர் ரெத்தினசாமி, செந்துறை நெடுஞ்சாலைதுறை உதவிக்கோட்டப் பொறியாளர், உதவிப்பொறியாளர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

The post செந்துறை-பொன்பரப்பி இடையே சாலை அகலப்படுத்தும் பணி: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Senturai-Ponparappi ,Monitoring Officer ,Ariyalur ,District Monitoring Officer ,Vijayalakshmi ,Jayangondam ,Senturai ,Senturai- ,Ponbarappi ,Dinakaran ,
× RELATED வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு...