×

கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு கோவாவில் சிலை

பனாஜி: கோவாவில் பிரபல கால்பந்து வீரர்  கிறிஸ்டியானோ ரொனால்டோவை கவுரவிக்கும் விதமாக அவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கால்பந்து நட்சத்திர வீரர்களில் ஒருவரான போர்ச்சுக்கல் நாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமின்றி கோவாவிலும் கால்பந்து விளையாட்டு பிரபலம் என்பதால், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரசிகர்களும் அதிகளவில் உள்ளனர். இந்நிலையில் கோவா மாநிலம் பனாஜியில், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பிரமாண்ட சிலை நேற்று திறக்கப்பட்டது. இதுகுறித்து கோவா மாநில அமைச்சர் மைக்கேல் லோபோ கூறுகையில், ‘இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாகவும், கால்பந்து விளையாட்டில் கோவா மாநிலத்தை முன்னிலை படுத்தவும், தேசிய அளவில் கால்பத்து விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின்  சிலை நிறுவப்பட்டுள்ளது. நம்முடைய வீரர்களும் உலகளவிலான ஜாம்பவான்கள் போன்று வரவேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்’ என்றார்….

The post கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு கோவாவில் சிலை appeared first on Dinakaran.

Tags : Goa ,Ronaldo ,Panaji ,Cristiano Ronaldo ,Dinakaran ,
× RELATED யூடியூப் சேனல் நிறுவனர் பெலிக்ஸிற்கு...