×

தொழில்முனைவோருக்கு ஓராண்டு சான்றிதழ் படிப்பு

தர்மபுரி, செப்.27: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க நிறுவனம், இடிஐஐ அகமதாபாத் நிறுவனத்துடன் இணைந்து, தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் என்ற தலைப்பில், ஓராண்டு சான்றிதழ் படிப்பு வழங்கப்பட உள்ளது. இடிஐஐ பேராசிரியர்களால் நேரடியாக நடத்தப்படும் இந்த வகுப்புகள், வரும் அக்டோபர் 14ம்தேதி தொடங்குகிறது. இதற்கான நேர்காணல், இம்மாத கடைசி வாரத்தில் நடக்கிறது. 21 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைவரும் இந்த படிப்பில் சேரலாம். மேலும், விபரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்கு , தர்மபுரி மாவட்ட இடிஐஐ ஒருங்கிணைப்பாளர் கவுதம் சண்முகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தொழில்முனைவோருக்கு ஓராண்டு சான்றிதழ் படிப்பு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Tamil Nadu Entrepreneurship Development Institute ,EDII Ahmedabad ,EDII ,Dinakaran ,
× RELATED தருமபுரி தனியார் பள்ளியில்...