×

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

சேலம், செப்.27: சேலம் பள்ளப்பட்டி தம்மண்ணச்செட்டி ரோடு பகுதியில், கார் ஒன்றில் ரேஷன் அரிசி கடத்தி வந்த 2 பேரை, காருடன் பிடித்த அப்பகுதி பொதுமக்கள், பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசாரிடம், 2 பேரும் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள், நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் வடுகம்பாளையத்தை சேர்ந்த மணி(44) என்பதும், அதே ஊரைச்சேர்ந்த கண்ணன்(36) என்பதும் தெரியவந்தது. இருவரும் அப்பகுதியில் வீடு வீடாக சென்று ரேஷன் அரிசியை வாங்கியுள்ளனர். இவர்களிடம் இருந்து 120 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

The post ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Dammannachetty Road ,Salem Pallapatti ,Pallapatti ,Dinakaran ,
× RELATED சேலம் கோட்டத்தில் ரயில்வே ஸ்டேஷன்களில் மரக்கன்றுகள் நடும் விழா