×

கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவிகளுக்கென தனி ஓய்வறை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அனைத்து அரசு கல்லூரிகளிலும் மாணவிகளுக்கு தனி ஓய்வறை அமைக்க ரூ.8.55 கோடியை 3 வாரங்களில் ஒதுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. அரசு பள்ளி, கல்லூரிகளில் சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள் பராமரிக்கப்படவில்லை என புகார் அளிக்கப்பட்டது. நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் நாப்கின் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

The post கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவிகளுக்கென தனி ஓய்வறை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chennai High Court ,Tamil Nadu government ,High Court ,Dinakaran ,
× RELATED குத்தகை ரத்து விவகாரம் தொடர்பாக...