×

வீட்டில் குட்கா விற்பனை செய்த 2பெண்கள் உள்பட 4 பேர் கைது

பெரம்பூர்: ராஜமங்கலம் பகுதியில் வீட்டில் பதுக்கிவைத்து குட்கா விற்பனை செய்த இரண்டு பெண்கள் உள்பட 4 பேரை கைது செய்தனர். சென்னை ராஜமங்கலம் இந்திரா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குட்கா பதுக்கிவைத்து விற்பனை நடப்பதாக கிடைத்த தகவல்படி, ராஜமங்கலம் இன்ஸ்பெக்டர் மூர்த்தி உத்தரவின்படி, சப்-இன்ஸ்பெக்டர் அபிநயா தலைமையில் போலீசார் விரைந்தனர். இந்திரா நகர் நார்த் ஜெகநாதன் நகர் பகுதியில் ஒரு வீட்டில் சோதனை நடத்தியபோது குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த வீட்டில் இருந்து 8 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். குட்காவை பதுக்கி விற்பனைசெய்த சங்கீதா (44), அவரது கணவர் அனில்குமார் (50), சங்கீதாவின் தங்கை சலோமி (39), இவரது மகன் பிரவீன் (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர். ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் இருந்து குட்காவை குறைந்த விலைக்கு வாங்கிவந்து தெரிந்தவர்களுக்கு மட்டும் விற்பனை செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post வீட்டில் குட்கா விற்பனை செய்த 2பெண்கள் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Gutka ,Perampur ,Rajamangalam ,Chennai Rajamangalam ,Indira Nagar ,
× RELATED வீட்டில் குட்கா விற்ற அக்கா, தங்கை உள்பட 4 பேர் அதிரடி கைது