×
Saravana Stores

ஊராட்சி வாகன பேட்டரி திருட்டு: போலீசார் விசாரணை

தேவதானப்பட்டி, செப்.26: தேவதானப்பட்டி அருகே தூய்மை பணிக்காக பயன்படுத்தும் வாகனத்தின் பேட்டரியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி ஊராட்சியில் தூய்மை பணிக்காக ஐந்துக்கும் மேற்பட்ட தூய்மை பேட்டரி வாகனங்கள் உள்ளன.

இந்த பேட்டரி வாகனங்களை கடந்த 18ம் தேதி மாலை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நிறுத்தி விட்டு அதன் ஊழியர்கள் சென்றுவிட்டனர். மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது, ஒரு தூய்மை வாகனத்தில் உள்ள பேட்டரியை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ஊராட்சி வாகன பேட்டரி திருட்டு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Devadanapatti ,G. Kallupatti ,Dinakaran ,
× RELATED தவறை தட்டிக் கேட்டவருக்கு அடி